Saturday, June 6, 2009

சமர்ப்பனம்

யாவரையும் போல-
மரண நாளை குறித்துவிட்டுப்
பயணத்தை தொடங்கினேன்....

இதுவரை கடவுளைக் கண்டதுமில்லை
இனி காண விரும்பவுமில்லை!

குழந்தையாய் கருவாக்கியவளும் - தாய்
மனிதனாய் உருவாக்கியவளும் - தோழி
என்னையும் கடவுளாக்கியவனும் - நண்பன்
என் முன்னே
அன்பே சிவமாய்!

இவர்களின்றி என்னுலகம்
இவ்வளவு அழகாய் இருக்கக் கூடுமா?
இந்த கேள்வியோடு
இன்னும் தொடர்கிறது - எனது பயணம்.

நீங்கள் இன்றி
நானில்லை இன்று.
அழகான வாழ்விற்கு
அழகு சேர்த்த உங்களுக்கே
இப்பதிவு சமர்ப்பனம்.